திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் என்ற சிவன் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்மன் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பிரதோஷ சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் பிரதோஷ கமிட்டியினா் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










