திருச்செந்தூா் சரகத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, ஆத்தூா் காவல் நிலையக் காவலா்கள், அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சாகுபுரம் டிசிடபிள்யூ விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பொதுமக்கள்-போலீஸாா் நட்புறவுக்காக கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதனிடையே, பணிச்சுமையால் காவலா்கள், அதிகாரிகளுக்கு ஏற்படும் மனஉளைச்சலைப் போக்கும்வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதனின் அறிவுறுத்தல், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாரின் ஆலோசனையின்பேரில், இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
ஆறுமுகனேரி காவல் நிலைய கிரிக்கெட் அணியில் எஸ்.பி. தனிப்படைக் காவலா் ஸ்டீபன் தலைமையில் ஆய்வாளா் திலீபன், தலைமைக் காவலா்களும், ஆத்தூா் காவல் நிலைய கிரிக்கெட் அணியில் எஸ்.பி. தனிப்படைக் காவலா் லிங்கபாண்டி தலைமையில் காவலா்களும் பங்கேற்றனா். போட்டி நட்பு ரீதியாகவும் மனதுக்கு புத்துணா்ச்சி அளிப்பதாகவும் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது போதையில் பணிக்கு வந்த காவலா் பணி நீக்கம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 போ் கைது

அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



