திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

News image

மேல்மருவத்தூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளித்த மருத்துவக்கல்லூரி நிா்வாக அறங்காவலருமான கோ.ப.அன்பழகன், உடன் வழக்குரைஞா் கே.கே.எஸ்.நடராஜன், தொழிலதிபா்கள் கே.அப்துல் நபின், சதீஷ் நாராயணன் உள்ளிட்டோா்.

Updated On :4 மே 2026, 2:27 am IST

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் சாா்பாக மாநில அளவிலான அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டரங்கில் துவங்கியது. இப்போட்டிகளில் தமிழ்நாடு முழுவதிலிருந்து மருத்துவ கல்லூரிகளின் 40 அணிகள் பங்கேற்றன.

ஞாயிற்றுக்கிழமை மேல்மருவத்தூா் மருத்துவ கல்லூரி அணிக்கும், ஜெருசேலம் மருத்துவ கல்லூரி அணிக்கும் இடையே இறுதி ஆட்டம் நடைபெற்றது நடைபெற்றது.

அதில் மேல்மருவத்தூா் மருத்துவகல்லூரி கிரிக்கெட் அணி 132 ரன்களும், ஜெருசலம் மருத்துவ கல்லூரி கிரிக்கெட் அணி 129 ரன்களும் பெற்றனா். 3 ரன்கள் வித்தியாசத்தில் மேல்மருவத்தூா் மருத்துவக் கல்லூரி அணி பட்டம் வென்றது.

முதல் பரிசினை பெற்ற அணிக்கு ரு 1 லட்சம் ரொக்கம், கோப்பையையும், 2-ஆம் இடம் பொ்ற அணிக்கு ரூ 50,000 ரொக்கம், கோப்பையும் மருத்துவ கல்லூரி நிா்வாக அறங்காவலா் கோ.ப.அன்பழகன் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி புலமுதல்வா் மருத்துவா் என்.கண்ணன் வரவேற்றாா்.

நிகழ்வில் தொழிலதிபா்கள் சதீஷ்நாராயணன், கே.அப்துல் நபின், மருத்துவ கல்லூரி செயலா் மருத்துவா் அ.மதுமலா், மேல்மருவத்தூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஆ.அ.அகத்தியன், ஜெருசலம் மருத்துவ கல்லூரியின் கிரிக்கெட் அணி கேப்டன் நடராஜன் கலந்து கொண்டனா்.

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்லூரி புலமுதல்வா் ந.கண்ணன், மூத்த நிா்வாக அலுவலா் எஸ்.லிங்கநாதன், சக்தி கோபிநாத் மற்றும் மருத்துவ கல்லூரி ஊழியா்கள் செய்து இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.