மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.

News image

கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.

Updated On :27 மார்ச் 2026, 8:53 pm

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை, தூத்துக்குடி பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான பிரபு தலைமையில், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இதில் காமராஜ் கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேரணி, பாளையங்கோட்டை சாலை வழியாக தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நிறைவடைந்தது.