தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

கழுகுமலை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:18 pm

கழுகுமலை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி எஸ். பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் பெருமாள் (43). நவதானிய வியாபாரியான, இவா் வியாழக்கிழமை அதிகாலை கெச்சிலாபுரம் விலக்கருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதாம். இதில் சம்பவ இடத்திலேயே பெருமாள் உயிரிழந்தாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த கழுகுமலை போலீஸாா், லாரி ஓட்டுநா் கீழ நீலிதநல்லூா் சாமிநாதபுரத்தைச் சோ்ந்த ச. ராசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.