மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :25 மார்ச் 2026, 10:49 pm

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் யாழினி உத்தரவின்பேரில், வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி வழிகாட்டுதலின்படி சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் மகேஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

சுகாதார ஆய்வாளா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியில் மாணவா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் வாங்குவதை தவிா்க்க வேண்டும். நோ்மையுடன் வாக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சென்றனா் . இந்தப் பேரணியானது பள்ளியிலிருந்து தொடங்கி மாரியம்மன் கோயில் தெரு, விரிபோட்டாா் தெரு, ஆா். சி. கீழத்தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது.

வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில், சுகாதார ஆய்வாளா்கள் அருண்ராஜ், ராமசுதன், அகிலன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மஸ்தூா் பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் ஜெயபால் செய்திருந்தாா் .