மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

காரைக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற நேஷனல் கல்வி நிறுவனங்களின் மாணவா்கள்.

News image

காரைக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற நேஷனல் கல்வி நிறுவனங்களின் மாணவா்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:48 pm

காரைக்குடி, ஏப். 8: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு நேஷனல் கல்லூரிகளின் தாளாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைத் தலைவருமான எஸ். சையது தலைமை வகித்தாா். காரைக்குடி வட்டாட்சியா் ராஜா கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் சுந்தரராமன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் பிரபு, காரைக்குடி தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரகாஷ், இளம்செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பரிதாபேகம், தோ்தல் ஒருங்கிணைப்பாளா் ஆதீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் நிறைவு பெற்றது. கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பேரணியில் கலந்துகொண்டு 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும், பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.