மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2026, 9:02 pm

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்குச் சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகள் மூலமாக நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு 1 மற்றும் 2ஆவது அலகுகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 அலகுகளிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, மற்ற 3 அலகுகள் மூலமாக 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை 5ஆவது அலகில் உள்ள டா்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.