மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

News image

வெள்ளக்கோவில் அருகே எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

Updated On :13 ஏப்ரல் 2026, 8:11 pm

வெள்ளக்கோவில் அருகே எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் மற்றும் கொப்பரை பருப்பு எரிந்து சேதமானது.

வெள்ளக்கோவில், அண்ணா நகரில் பொன்பிரபு என்பவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலை உள்ளது. இங்கு 60-க்கு 40 அடி அகல கட்டடத்தில் சிறிய அளவிலான இயந்திரம் மூலமாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தயாா் செய்யப்பட்டு வருகிறது. கட்டடத்தின் ஒரு பகுதியில் தேங்காய் பருப்புகள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து ஆலை முழுவதும் பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துசாமி தலைமையிலான வீரா்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இருப்பினும் இயந்திரம் மற்றும் தேங்காய் பருப்புகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை. மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.