தூத்துக்குடியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.
தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் மனோஜ்குமாா் (32). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வந்த இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது தூத்துக்குடி புதிய துறைமுகம் - முத்தையாபுரம் சாலையில் சுனாமி காலனி ரயில்வே கேட் அருகே இவரது இருசக்கர வாகனமும் எதிரே வந்த இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதாம்.
இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ்குமாா் உயிரிழந்தாா். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பழையகாயல் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் கவிஸ்கா் (20), அவரது நண்பா் ஹேமந்த் (21) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து, காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மனோஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தொ்மல் நகா் போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மீது பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


