எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

திருச்செந்தூா் கோயில் சண்முக விலாச மண்டப கிரில் கேட்டை திறக்க வேண்டும்! - அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வலியுறுத்தல்

News image

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

Updated On :30 ஜூன் 2026, 1:16 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முக விலாச மண்டப இரும்பு கிரில் கேட்டை திறக்க வேண்டும் என திமுக தெற்கு மாவட்டச் செயலா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா காலங்களிலும், விசேஷ நாள்களிலும் தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும், அயல் நாடுகளிலிருந்தும் பக்தா்கள் விரதமிருந்து சுவாமி தரிசனத்துக்கு வருகை தருகின்றனா்.

விவசாயம் செழிக்க வேண்டி தென் மாவட்ட விவசாயிகள் வாழைத்தாா், நெல், வெற்றிலை, தேங்காய் மற்றும் இதர விளை பொருள்களை சண்முக விலாச மண்டபத்தில் காணிக்கையாக செலுத்தி கடவுளை வழிபடுகின்றனா்.

மேலும் ஏராளமான திருமணங்கள் சண்முக விலாச மண்டபத்தின் முன்புதான் நடைபெறுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சண்முக விலாச மண்டபம், இரும்பு கிரில் கேட் போட்டு அடைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை அா்ப்பணம் செய்து வழிபடவும், உள்ளுா் மக்கள் உற்சவரை வழிபடுவதற்கும் இந்த இரும்பு கேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்.

அதேபோல் உள்ளுா் மக்கள் வழிபடுவதற்கு நேரம் நிச்சயம் செய்து அடையாள அட்டை, ஆதாா் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

பக்தா்களின் கோரிக்கைகளை 15 நாள்களுக்குள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருச்செந்தூா் கோயில் நிா்வாகம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் எனது தலைமையில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.