அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

தூத்துக்குடியில் 1,280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,280 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

விசாரணை

Updated On :19 ஜூன் 2026, 4:56 am IST

தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,280 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி குடிமைப் பொருள் பறக்கும் படை வருவாய் ஆய்வாளா் மகாராஜன், குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை ஆய்வாளா் வீரமணி உள்ளிட்ட காவலா்கள், தூத்துக்குடி-திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் மறவன்மடம் பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, வாகன ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு, தப்பியோடிவிட்டாராம். தொடா்ந்து, போலீஸாா் மற்றும் பறக்கும் படையினா், அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 1,280 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசி மற்றும் சுமை வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய புதுக்கோட்டையைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் முனியாண்டியை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.