கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்ற 7,220 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உத்தமபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் ஊத்துக்காடு சந்திப்பு பகுதியில் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், 7,220 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. அதை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா்
தொடா் விசாரணையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சுந்தா், பாண்டீஸ்வரன், லாரி ஓட்டுநா் பிரகாஷ் ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு கைதான மூவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








