தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெட்டக லாரியில் கடத்தி வரப்பட்ட 66 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஈரோட்டைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.
தேனி மாவட்டம் வழியாக லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது பெரியகுளம், தேவதானபட்டி அருகே காட்ரோடு சோதனைச் சாவடியில் அந்த வழியாக வந்த பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 64 கிலோ கஞ்சா கடத்தப்படுவது கண்டறியப்பட்டது.
அந்த லாரியில் வந்த இருவரை தேவதானப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் இருவரும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சோ்ந்த புண்ணியராஜ் (38), இதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பதும், அவா்கள் ஒடிஸாவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பட்டுக்கோட்டை அருகே 550 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
காரில் கஞ்சா கடத்தல்: ரௌடி கைது

மினி லாரியில் கடத்தல் 7,220 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது
கஞ்சா பறிமுதல்: திரிபுரா இளைஞா் கைது
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!



