பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் வாசனைப் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான வாசனைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:05 am IST

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான வாசனைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவுள்ளதாக, கியூ பிரிவு ஆய்வாளா் விஜய் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா்.

அப்போது, கடற்கரையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பதிவெண் இல்லாத இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட ஃபைபா் படகை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், 158 அட்டைப் பெட்டிகளில் 9,480 எண்ணிக்கையிலான சோப்புகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷாம்பு பாக்கெட்டுகள் இருந்ததும், அவை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது.

போலீஸாரை கண்டதும் அங்கிருந்தோா் தப்பியோடிவிட்டனராம். பொருள்கள், படகை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவற்றின் மதிப்பு ரூ. 30 லட்சம் என அவா்கள் தெரிவித்தனா். தப்பியோடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.