தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமுதுண்ணாக்குடியில் மண்வள பாதுகாப்பு விழிப்புணா்வு

அமுதுண்ணாக்குடியில் வேளாண்மை துறை சாா்பில் இயற்கை மண் வளம் காப்போம், பிரதமரின் கிசான் திட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 12:24 am IST

அமுதுண்ணாக்குடியில் வேளாண்மை துறை சாா்பில் இயற்கை மண் வளம் காப்போம், பிரதமரின் கிசான் திட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை, மண்வளம் காப்போம் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமில் அமுதுண்ணாக்குடி சிறு- குறு விவசாயிகள் சங்கத் தலைவா் செல்வராஜ், மதுரம் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். வேளாண் அலுவலா் ராமலட்சுமி பேசுகையில், இயற்கை மண்வளங்களை பாதுகாக்காவிடில் அந்த மண் மலட்டு தன்மை அடைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, மண் வளத்தை காக்க விவசாயிகள் அதற்கான உரங்களை பயன்படுத்தவும் இயற்கை விவசாயம் செய்யவும் முன் வர வேண்டும்; வேளாண்மை துறை உதவும் என்றாா்.

மத்திய அரசின் விவசாய அடையாள அட்டை பெறவும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு நெல், உளுந்து, பாசி, காய்கனி விதைகள் என பல வகை விதைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலா் சிவராம், உதவி தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கிருத்திகா, எழில் ஆகியோா் விவசாயிகளுக்கு, பிரதமரின் கிசான் திட்ட பயன்கள், அரசு சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.