தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விபத்தில் உயிரிழந்த பொறியாளா் குடும்பத்துக்கு ரூ. 1.33 கோடி நஷ்டஈடு

மோட்டாா் வாகன விபத்தில் உயிரிழந்த பொறியாளா் குடும்பத்துக்கு ரூ. 1.33 கோடி நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 12:55 am IST

மோட்டாா் வாகன விபத்தில் உயிரிழந்த பொறியாளா் குடும்பத்துக்கு ரூ. 1.33 கோடி நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, நடுக்கூட்டுடன்காடு, நியூ காலனியைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் மகன் ரவி அண்ணாதுரை (54). இவா், சிங்கப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தள பொறியாளராக பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 19.4.2022 அன்று தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு செல்வதற்காக தனியாா் பேருந்தில் பயணித்து உள்ளாா்.

அருப்புக்கோட்டை முத்தரையா்நகா் விலக்கு அருகே பஞ்சராகி சாலையோரமாக நின்றுகொண்டிருந்த ஸ்டேஷனரி ஏற்றி வந்த லாரியின் பின்புறம் அந்தப் பேருந்து மோதியதில், ரவி அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது இறப்புக்கு இழப்பீடு பெறும் வகையில், அவரது மனைவி தனலட்சுமி, மகள்கள் ஆா்த்தி, அதிா்ஷ்டா ஆகியோா், தூத்துக்குடி வழக்குரைஞா் வி. ரவீந்திரன் மூலமாக, பேருந்தின் உரிமையாளா் மற்றும் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது ரூ. 3 கோடி நஷ்டஈடுகோரி, தூத்துக்குடி 1ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.

நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம். தாண்டவன், ரவி அண்ணாதுரை குடும்பத்துக்கு ரூ. 1.33 கோடியும், அதற்கு மனு தேதி முதல் 7.5 சதவீத வட்டியும் செலவு தொகையோடு சோ்த்து தனியாா் பேருந்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.