திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷிடம் கோரிக்கை மனு வழங்கிய கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா்.

Updated On :2 ஜூன் 2026, 3:09 am IST

கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையில் குடிநீா் பகிா்மானக் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகளால் சாலை சேதமடைந்துள்ளது. எனவே, போா்க்கால அடிப்படையில் சாலையை செப்பனிட்டு விரிவாக்கம் செய்ய வேண்டும். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தினமும் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவா் க. தமிழரசன் தலைமை வகித்தாா். செயலா் எ. பெஞ்சமின் பிராங்களின், பொருளாளா் கே. கருப்பசாமி, நாதக வழக்குரைஞா் ரவிக்குமாா், இந்தியக் கலாசார நட்புறவுக் கழக மாநில துணைத் தலைவா் அபிராமி முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

பின்னா், கோரிக்கை மனுவை நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷிடம் வழங்கினா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.