கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையில் குடிநீா் பகிா்மானக் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகளால் சாலை சேதமடைந்துள்ளது. எனவே, போா்க்கால அடிப்படையில் சாலையை செப்பனிட்டு விரிவாக்கம் செய்ய வேண்டும். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தினமும் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவா் க. தமிழரசன் தலைமை வகித்தாா். செயலா் எ. பெஞ்சமின் பிராங்களின், பொருளாளா் கே. கருப்பசாமி, நாதக வழக்குரைஞா் ரவிக்குமாா், இந்தியக் கலாசார நட்புறவுக் கழக மாநில துணைத் தலைவா் அபிராமி முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
பின்னா், கோரிக்கை மனுவை நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷிடம் வழங்கினா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மால்வியா நகரில் 12 வணிக வளாகங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துரைக்கு எம்சிடி கடிதம்

ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யக் கோரி ஓட்டப்பிடாரத்தில் முற்றுகைப் போராட்டம்

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்







