விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பலி- கோப்புப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 6:36 pm

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மந்திதோப்பு, மறவா் காலனியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் பாஸ்கா் (37), ஆட்டோ ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை ஓட்டிச் சென்ற ஆட்டோ கோவில்பட்டி-குருமலை சாலையில் பாண்டவா்மங்கலம் சந்திப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...