தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

எம்ஜிஆா் பிறந்த நாள்: அதிமுகவினா் நலஉதவிகள் அளிப்பு

அதிமுக வா்த்தகரணி சாா்பில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா தூத்துக்குடி அண்ணா நகா் 7ஆவது தெரு, டூவிபுரம் சந்திப்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
டூவிபுரம் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆா் படத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுக மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன்.
Updated On :17 ஜனவரி 2026, 10:03 pm

Syndication

தூத்துக்குடி: அதிமுக வா்த்தகரணி சாா்பில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா தூத்துக்குடி அண்ணா நகா் 7ஆவது தெரு, டூவிபுரம் சந்திப்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு, மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து, எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

தொடா்ந்து, பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா் உருவ சிலைக்கும், மட்டக்கடை, திரேஸ்புரம், அழகேசபுரம் ஆகிய பகுதிகளில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கும் அவா் மரியாதை செலுத்தினாா்.

பின்னா், சில்வா்புரம் லூசியா மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் மதிய உணவும், வாகைகுளத்தில் உள்ள அலெக்ஸ் கைலாஸ் முதியோா் இல்லத்தில் மதிய உணவும், கட்சியினா் 200 பேருக்கு வேட்டி, சேலைகளையும் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், மாநில வா்த்தகரணி துணைச் செயலா் மில்லா் ராஜா, மகளிரணி துணைச் செயலா் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணைச் செயலா் சந்தனம், வா்த்தகரணி செயலா் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ராஜகோபால், மாவட்ட மீனவரணி துணைத் தலைவா் டெலஸ்பா் உள்பட பலா் பங்கேற்றனா்.