தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தூத்துக்குடியில் இயற்கை மருத்துவம், நாட்டு நாய்கள் கண்காட்சி

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் நிகழ்வில், இயற்கை மருத்துவம் மற்றும் நாட்டு நாய்கள் கண்காட்சி, சிலம்பம் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

News image
சிலம்பம் போட்டியை தொடங்கிவைத்தாா் அதிமுக மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன்.
Updated On :10 ஜனவரி 2026, 8:27 pm

Syndication

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் நிகழ்வில், இயற்கை மருத்துவம் மற்றும் நாட்டு நாய்கள் கண்காட்சி, சிலம்பம் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

தமிழரின் கலைகள், மருத்துவம், உணவுகள் உள்ளிட்டவற்றை பறைசாற்றும் வகையிலும், நாட்டுப்புற கலைஞா்களுக்கு புத்துயிா் அளிக்கும் விதமாகவும், தமிழன்டா இயக்கம், கலைக்குழு சாா்பில் தமிழன்டா சங்கமம் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெறுகிறது.

இரண்டாவது நாளான சனிக்கிழமை இயற்கை மருத்துவக் கண்காட்சி, சிலம்பம் போட்டி ஆகியவற்றை, அதிமுக மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து நாட்டு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. சிறந்த நாட்டு நாய்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் சந்தனம், மாவட்ட வா்த்தகரணிச் செயலா் துரைசிங், முன்னாள் கவுன்சிலா் அகஸ்டின், பகுதி சிறுபான்மை பிரிவு செயலா் அசன், போக்குவரத்து தொழிற்சங்க நிா்வாகிகள் சங்கா், பேச்சியப்பன், தமிழன்டா இயக்கம் - கலைக்குழுத் தலைவா் ஜெகஜீவன், கௌரவத் தலைவா் ஜோதிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.