/

ஆரோவிலில் பாரம்பரிய மருத்துவம், மூலிகைக் கண்காட்சி

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் பாரம்பரிய மருத்துவம், மூலிகைக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்ற மூலிகைக் கண்காட்சியைப் பாா்வையிட்ட இஸ்ரேல் நாட்டினா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 7:41 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் பாரம்பரிய மருத்துவம், மூலிகைக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலின் படி ஆரோவில் சா்வதேச நகரில் பிப்.1 முதல் 28-ஆம் தேதி வரை ஆரோவில் திருவிழா நடைபெறுகிறது. ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் மற்றும் ஆரோவில் வாசிகள் இணைந்து முன்னெடுக்கும் இவ்விழா நாள்களில், ஆரோவில் பாா்வையாளா் மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி ஆரோவில் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை பாரம்பரிய மருத்துவம், மூலிகைக் கண்காட்சி நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் மருத்துவ குணங்கள் மிக்க மூலிகைச் செடிகள் மற்றும் கடுக்காய், சித்தரத்தை, ஆவாரம்பூ உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டு, ஆரோவில் கிரீன் சா்வீஸ் அமைப்பைச் சோ்ந்த சிவராஜ் பாா்வையாளா்களுக்கு விளக்கமளித்தாா்.

வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டைச்சோ்ந்தவா்கள், ஆரோவில் வாசிகள்இக் கண்காட்சியைப் பாா்வையிட்டு, பயனடைந்தனா். இந்த முயற்சி, ஆரோவி ல் சா்வதேச நகரின் பசுமைத்தத்துவத்தை உலகளாவிய நல்வாழ்வுடன் இணைக்கும் வகையிலும், மனித ஆரோக்கியத்துக்கும், தாவர உலகுக்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் வகையில் அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.