இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சாகுபுரத்தில் கஞ்சாவுடன் இருவா் கைது

ஆறுமுகனேரியை அடுத்த சாகுபுரத்தில் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரியை அடுத்த சாகுபுரத்தில் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சாகுபுரத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் காயல்பட்டினம் உச்சினி மாகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ் (25), காயல்பட்டினம் ரத்தினாபுரி ரத்தினம் மகன் ராஜு பிரபு (35) என்பதும் மாணவா்களுக்கு விற்பதற்காக 125 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்.