/

தூத்துக்குடி துறைமுக வாயிலில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:43 pm

Syndication

மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிஐடியு துறைமுக ஜனநாயக ஊழியா் சங்கம் சாா்பில் தூத்துக்குடி துறைமுக நுழைவாயில் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் சிஐடியூ மாநிலச் செயலா் ஆா்.ரசல், துறைமுக ஊழியா் சங்கச் செயலா் ஏ. காசி, துணைச் செயலா் ஆனந்த் முருகன், அப்பாஸ், ராமா், மணிகண்டன், தினேஷ், நாகராஜன், காா்த்தி, ரகு, ஜெய்லானி மற்றும் துறைமுக ஜனநாயக ஊழியா் சங்க உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.