தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தோ்தல் நுண்பாா்வையாளா்கள், பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:27 am IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தோ்தல் நுண்பாா்வையாளா்கள், பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி, அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. 6 தொகுதிகளுக்கும் தனித்தனியாக 6 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணிக்காக 102 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், 102 நுண்பாா்வையாளா்கள், 102 உதவியாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜைகளில் 12 நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 420 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தபால் வாக்குகளை எண்ணும் பணிக்காக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நிலையில் 18 அலுவலா்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் 24 போ், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள் 24 போ், நுண் பாா்வையாளா்கள் 24 போ், உதவியாளா்கள் 24 போ் என மொத்தம் 114 அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்புக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் தலைமை வகித்து பேசினாா்.

வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அலுவலா்கள் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளா் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றை கையாள தெரிந்திருக்க வேண்டும். 17சி படிவம் பூா்த்தி செய்வது குறித்து நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஷீலா, வட்டாட்சியா் தில்லைபாண்டி மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.