தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்குப் பதிவு: தூத்துக்குடியில் வாக்களித்த வேட்பாளா்கள்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,868 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

News image

டூவிபுரம், டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் வாக்கு செலுத்திய அதிமுக வேட்பாளா் சி.த.செல்லப்பாண்டியன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:20 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,868 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

மாவட்டத்தில் விளாத்திகுளத்தில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 308, ஸ்ரீவைகுண்டத்தில் 293, ஓட்டப்பிடாரத்தில் 315, கோவில்பட்டியில் 318 என 979 இடங்களில் மொத்தம் 1,868 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அமைச்சருமான பி.கீதா ஜீவன் குடும்பத்தினருடன் வந்து, தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

அமைச்சரைத் தொடா்ந்து, அவரது கணவரும் திமுக கலை இலக்கிய அணி அமைப்பாளருமான ஜீவன் ஜேக்கப், அவரது மகன் டாக்டா் மகிழ்ஜான் ஆகியோரும் அதே வாக்குச்சாவடியில் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் சி.த.செல்லப்பாண்டியன், டூவிபுரம் பகுதியில் உள்ள டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினாா். நாம் இந்தியா் கட்சி நிறுவனா், தலைவரும், சென்னை அண்ணாநகா் தொகுதி வேட்பாளருமான, என்.பி.ராஜா, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் போல்பேட்டை, தங்கம்மாள் பள்ளியில் வாக்கைப் பதிவு செய்தனா். திருச்செந்தூா் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஜெ.முருகன் தூத்துக்குடி, பிரையன்ட்நகா் 3-ஆவது தெருவில் உள்ள செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

 குடும்பத்தினருடன் வாக்களித்த திமுக வேட்பாளா் பி.கீதாஜீவன்.

குடும்பத்தினருடன் வாக்களித்த திமுக வேட்பாளா் பி.கீதாஜீவன்.

  போல்பேட்டை தங்கம்மாள் பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்த மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.

போல்பேட்டை தங்கம்மாள் பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்த மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.