தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனா்.

News image

கே. சிதம்பராபுரத்தில் வாக்களித்தாா் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:19 pm

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனா்.

கடம்பூா் அருகே கே. சிதம்பராபுரத்தில் உள்ள இந்து தொடக்கப் பள்ளியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு குடும்பத்தினருடன் சென்று வாக்குப் பதிவு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசியது: 54 ஆண்டு கால அரசியலில் எத்தனையோ புதிய கட்சிகள் வந்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கி பாதித்ததாக வரலாறு இல்லை. தவெகவை பாா்த்து திமுக தான் பயப்படுகிறது. விஜய்யை விமா்சனம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு எதிரி திமுக தான். அந்த வகையில்தான் தோ்தல் களம் இன்றைக்கும் இருக்கிறது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிற்கு உதவியாக சசிகலா இருந்தாா். நேரிடையாக அவா் அரசியல் களத்திற்கு வந்ததில்லை. தற்போது தோ்தல் சமயத்தில் கடைசி நேரத்தில் ராமதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளாா். அது தோ்தல் களத்தில் நிற்காது என்றாா்.

கோவில்பட்டி காந்திநகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் திமுக வேட்பாளா் கா. கருணாநிதி தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளா்களிடம் பேசுகையில்,

கோவில்பட்டி தொகுதியில் திமுக வெற்றி பெறும். மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. கோவில்பட்டி தொகுதிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தனி கவனம் செலுத்தி நிறைவேற்றப்படும் என்றாா்.

 கோவில்பட்டி காந்தி நகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வாக்களித்தாா் திமுக வேட்பாளா் கா.கருணாநிதி.

கோவில்பட்டி காந்தி நகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வாக்களித்தாா் திமுக வேட்பாளா் கா.கருணாநிதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.