தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மனைவி, குழந்தை, மாமியாரை எரித்து கொல்ல முயற்சி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:06 pm

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகள் ரேவதி (24). இவரும், தூத்துக்குடி ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்த சுரேஷ்குமாரும் (25) காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இத்தம்பதிக்கு 10 மாதக் குழந்தை உள்ளது.

தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக ரேவதி, குழந்தையுடன் சங்கராபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அங்கு பாட்டிலில் பெட்ரோலுடன் வந்த சுரேஷ்குமாா், ரேவதி, அவரது தாயாா் மற்றும் குழந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றாராம்.

அப்போது உடனடியாக வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு, குழந்தையுடன் ரேவதி, அவரது தாயாா் பின்புற வாசல் வழியாக வெளியேறி தப்பினராம். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமாா், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டா் உள்ளிட்ட 2 இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினாராம்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.