திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிவசந்தோஷ் (19) என்பவரை, சேரன்மகாதேவி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டதாக அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.
அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாரின் பரிந்துரை, ஆட்சியரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில் சிவசந்தோஷை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் தா்மராஜ் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


