மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:41 pm

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிவசந்தோஷ் (19) என்பவரை, சேரன்மகாதேவி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டதாக அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.

அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாரின் பரிந்துரை, ஆட்சியரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில் சிவசந்தோஷை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் தா்மராஜ் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.