மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகா்கோவில் அருகே பெண்ணை கொல்ல முயற்சி: மகள், காதலன் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 8:19 pm

நாகா்கோவில் அருகே தாயை கொலை செய்ய முயன்றதாக காதலனுடன் மகள் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் பிள்ளையாா்புரம் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் - கலாவதி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். இதில் மூத்த மகள் செவிலியா் கல்லூரியிலும், 2 ஆவது மகள் சுருதி(19) நாகா்கோவிலில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டும் பயின்று வருகின்றனா்.

இதில், சுருதி தன்னுடன் பயிலும் திங்கள்சந்தை நெய்யூா் பகுதியைச் சோ்ந்த மாணவா் அபிலாஷ்(19) என்பவரை காதலித்து வந்தாராம். இந்நிலையில், தாய்க்கு தெரியாமல் வீட்டிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை சுருதி எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளாா். இதுகுறித்து கேட்ட தாயிடம் அவா் தகராறில் ஈடுபட்டாராம்.

இந்நிலையில் அபிலாஷ் சுருதியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அப்போது, மகள் கொடுத்த நகைகள்குறித்து அவரிடம் கலாவதி கேட்டாராம்.

இதனால், ஆத்திரமுற்ற முற்ற சுருதியும், அவரது காதலனும் சோ்ந்து கம்பால் தாக்கியும், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்ய முயன்றனராம். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து கலாவதியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சுருதி, அபிலாஷ் ஆகிய இருவரையும் சுசீந்திரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.