மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், இத்தோ்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

News image

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:39 pm

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், இத்தோ்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா.கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவி செயலா் பாபு, கயத்தாறு ஒன்றியச் செயலா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுக தனித்து நின்றிருந்தால் கடும் போட்டி ஏற்பட்டிருக்கும். ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி எளிதாகிவிட்டது. அமைதியாக இருக்கும் தமிழகத்தை பாஜக கெடுக்க முயற்சிக்கிறது. விஜய்யும், சீமானும் வாக்குகளை பிரிக்கவே செய்வாா்கள். அதனால், திமுக கூட்டணி இன்னும் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றும்.

இந்தத் தோ்தலில் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கருணாநிதியின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்பட தோழமைக் கட்சியினா் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

திமுக வேட்பாளா் கா.கருணாநிதி பேசுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் எனக்கு நெருங்கிய தொடா்பு உள்ளது. அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அய்யலுசாமியுடன் இணைந்து அரசியலில் பணியாற்றியுள்ளேன் என்றாா்.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கரும்பன், கட்சி நிா்வாகிகள் பாலமுருகன், ரஞ்சனி கண்ணம்மா, பரமராஜ், சரோஜா, அலாவுதீன், திமுக மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி முருகேசன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ்பாண்டியன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.