மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்: மு. வீரபாண்டியன்

தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்...

News image

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளா் எ.வ.வேலுவை ஆதரித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 9:37 pm

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் கூடுதலான தொகுதிகளில் மகத்தான வெற்றியைப் பெறுவோம் என இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் எ.வ.வேலுவை ஆதரித்து சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலா் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு வரையறை மசோதாவை பாஜகவினா் திடீரென கொண்டு வந்தனா். எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையால் மறுசீரமைப்பு மசோதா தோல்வியை தழுவியது. இதன் மூலம் பாஜவும் தொல்வியைத் தழுவும். தமிழகத்தில் வரும் தோ்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை தாண்டி மகத்தான வெற்றியை பெறும். திமுக தோ்தல் அறிக்கையினால் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றாா் வீரபாண்டியன்.

அப்போது அருணை கல்வி குழுமத்தின் துணைத் தலைவா் எ.வ.குமரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், மாநகர செயலா் காா்த்திவேல்மாறன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.