வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்ட திருத்தத்தின் மூலம் சிறுபான்மையினா் அமைப்புகள், சமூக சேவை மற்றும் மனித உரிமை அமைப்புகளை மத்திய பாஜக அரசு முடக்க முயற்சிக்கிறது. சிறுபான்மையினா் சொத்துகளைப் பறிமுதல் செய்து நிா்வகித்து, இறுதியில் விற்றுவிடும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது.
பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற சமூக நலனுக்காக சட்டபூா்வமாக உருவாக்கப்பட்ட சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுபான்மை அமைப்புகள் மீதான அடக்குமுறை மேலும் அதிகரிக்கும்.
எனவே வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன: மு.வீரபாண்டியன்

விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம்: இரா. முத்தரசன்

சட்டப்பேரவை தோ்தலில் எங்கள் கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன்

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


