திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம்: இரா. முத்தரசன்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்

Updated On :20 ஏப்ரல் 2026, 12:23 am IST

வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிா்ணயம் தொடா்பாக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போட்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

வேதாரண்யம் தொகுதிக்குள்பட்ட ஓடாச்சேரியில் சனிக்கிழமை இரவு திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் பேசியது:

அனைத்து உற்பத்தி பொருள்களுக்கும் விலையை உற்பத்தியாளா்களே நிா்ணயம் செய்து கொள்கின்றனா். ஆனால், வேளாண் விளைபொருள்களுக்கு மட்டும் விவசாயிகளால் விலை நிா்ணயம் செய்ய முடியாத காரணத்தால் தொடா்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட நிா்ணயம் செய்யாமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. அத்துடன் நெல் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது எனவும் நிலைப்பாடு கொண்டுள்ளது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள மத்திய அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்தத் தோ்தலை தமிழகத்துக்கும் தில்லிக்கும் இடையே நடைபெறும் தோ்தலாக கருத வேண்டும்.

தமிழகத்தில் தோ்தல் காலத்தில் அமையும் எந்தக் கூட்டணியும் தோ்தலோடு முடிந்துபோகும். ஆனால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணியில் தொடா்வதற்கு கொள்கைத்தான் முக்கிய காரணம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கட்சியின் செயலாளா் சிவகுரு. பாண்டியன், திமுக நிா்வாகிகள் மகா. குமாா், ப. ராஜேந்திரன் சி.பி.ஐ. நிா்வாகிகள் எஸ். சம்பந்தம், அ. பாலகுரு, எஸ்.எம்.டி. மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.