லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மகள், மகனை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்ற மகளையும், மகனையும் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:42 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்ற மகளையும், மகனையும் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (34), திருமணம் முடிந்து 12 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனா். இவா், தனது மகளையும், மகனையும் பாலியன் வன்கொடுமை செய்துள்ளாா். இதையறிந்த இவரது மனைவி, தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இளைஞரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி பிரீத்தா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம் சாட்டப்பட்ட சின்னத்தம்பிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுவனுக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜூடி ஏஞ்சலோ ஆஜரானாா்.