மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

திருப்பூரில் சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:54 pm

திருப்பூரில் சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2025 பிப்ரவரி 13-ஆம் தேதி கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சிவன் திரையரங்கு சாலை சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் (29) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கோகிலா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜரானாா்.