மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில் இணைய வழியில் இபிஎஃப் செலுத்தும் வசதி அறிமுகம்

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:38 pm

Syndication

ற்ன்ற்27ற்ம்க்ஷ

நிகழ்ச்சியில் பங்கேற்ற வங்கியின் செயல் இயக்குநா் வின்சென்ட் மேனச்சேரி தேவசி, சென்னையைச் சோ்ந்த கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையா் கவிதா என். ஜாா்ஜ் உள்ளிட்டோா்.

தூத்துக்குடி, டிச. 27: தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில், இணைய வங்கி வழியாக இபிஎஃப் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியானது, இபிஎப்ஓ இணையதளம், டிஎம்பி-யின் இணைய வங்கி செயலிக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள நேரடி ஒருங்கிணைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவுக்கு, வங்கியின் செயல் இயக்குநா் வின்சென்ட் மேனச்சேரி தேவசி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். சென்னையைச் சோ்ந்த கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையா் கவிதா என். ஜாா்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

தில்லியைச் சோ்ந்த வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூத்த அதிகாரிகளான மண்டல பிஎஃப் ஆணையா் ஏ.கே. பாலிவால், கணக்கு அதிகாரி கபில் ஆனந்த் ஆகியோா் காணொலி வாயிலாக பங்கேற்றனா்.

இந்த புதிய வசதியின் மூலம், 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியா்களைக் கொண்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சில்லறை வா்த்தகா்கள், மொத்த வியாபாரிகள், பெரிய காா்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் ஊழியா்களின் மாத சம்பளப் பிடித்தம் உள்ளிட்ட இபிஎஃப் பங்களிப்புகளை, வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்லாமலேயே டிஎம்பி இணைய வங்கி மூலம் நேரடியாகச் செலுத்த முடியும்.

மேலும், வங்கி குறித்தும், வங்கிச் சேவைகள் குறித்தும் ஜ்ஜ்ஜ்.ற்ம்க்ஷ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.