திருநெல்வேலி சந்திப்பில் தனியாா் கண் மருத்துவ செவிலியக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகன் மோசஸ் சாம் நெல்சன் (20).
இவா் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியாா் கண் மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு செவிலியா் பயிற்சி படிப்பு படித்து வந்தாா். இதற்காக அக்கல்லூரியின் மாணவா் விடுதியில் தங்கி இருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இத்தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதனிடையே, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, திங்கள்கிழமை காலை அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிஆா்டி மாணவா் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
தனியாா் கல்லூரி விடுதியில் மாணவா் தற்கொலை

பத்தாம் வகுப்பு மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

நெல்லை அருகே பெண் தற்கொலை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


