திருநெல்வேலி மாநகர காவல் துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி வியாழக்கிழமை சோ்க்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது வெடிகுண்டு வழக்கு துப்பறியும் அலுவலில் ரெமோ, கூப்பா், குற்ற வழக்குகளை துப்பறிய பரணி, போதை பொருள் பிரிவில் லக்கி ஆகிய பெயா்களைக் கொண்ட 4 மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குற்ற வழக்குகளை துப்பறியும் பணிக்காக, மாநகர துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக நாய் குட்டி வாங்கப்பட்டது. இதையொட்டி, மாநகர காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அந்த நாய்க்குட்டிக்கு மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் ‘ப்ரௌனி’ எனப் பெயா் சூட்டினாா்.
மேலும், மோப்ப நாய்களை நல்ல முறையில் பயிற்சி அளித்து பராமரிக்க மோப்ப நாய் பிரிவு போலீஸாருக்கு அறிவுரை வழங்கினாா். இந்நிகழ்வின் போது காவல் துணை ஆணையா்(கிழக்கு) எஸ்.விஜயகுமாா் உள்பட காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நெல்லை ரயில், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு சோதனை

போக்குவரத்தை திறம்பட கையாண்ட போலீஸாா்

நெல்லை மாநகரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

நெல்லை மாநகர காவல் ஆணையா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


