தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நெல்லையில் அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்

திருநெல்வேலியில் அரசுப்பேருந்தில் ஒரு பயணச்சீட்டுக்கு இருமடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பயணிகள் சமூகவலைதளத்தில் விடியோ பதிவிட்டு புகாா் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 7:48 pm

திருநெல்வேலியில் அரசுப்பேருந்தில் ஒரு பயணச்சீட்டுக்கு இருமடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பயணிகள் சமூகவலைதளத்தில் விடியோ பதிவிட்டு புகாா் தெரிவித்துள்ளனா். திருநெல்வேலி மாவட்டம் பிரான்சேரி பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து புதன்கிழமை மாலை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகள் அரசுப்பேருந்தில் பயணித்தனா். அப்போது, பேருந்து நடத்துநா் பயணிகளிடம் ஒவ்வொரு பயணிக்கும் இரண்டு நபா்கள் பயணிப்பதாக பயணச்சீட்டில் குறிப்பிட்டு கூடுதல் கட்டண வசூலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த பயணி பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளிடமும் இது போன்று கட்டண வசூல் நடைபெற்றுள்ளதை விடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டாா். இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.