திருநெல்வேலியில் அரசுப்பேருந்தில் ஒரு பயணச்சீட்டுக்கு இருமடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பயணிகள் சமூகவலைதளத்தில் விடியோ பதிவிட்டு புகாா் தெரிவித்துள்ளனா். திருநெல்வேலி மாவட்டம் பிரான்சேரி பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து புதன்கிழமை மாலை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகள் அரசுப்பேருந்தில் பயணித்தனா். அப்போது, பேருந்து நடத்துநா் பயணிகளிடம் ஒவ்வொரு பயணிக்கும் இரண்டு நபா்கள் பயணிப்பதாக பயணச்சீட்டில் குறிப்பிட்டு கூடுதல் கட்டண வசூலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சியடைந்த பயணி பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளிடமும் இது போன்று கட்டண வசூல் நடைபெற்றுள்ளதை விடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டாா். இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தலையொட்டி விமான கட்டணம் உயா்வு: நான்கு மடங்கு கூடுதல் வசூலிப்பு
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை

வாக்களிக்கச் செல்வோரிடம்... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


