மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: நெல்லையில் ஹோட்டல்களை மூடும் அபாயம்

திருநெல்வேலி மாநகரில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2026, 7:46 pm

திருநெல்வேலி மாநகரில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்காசிய நாடுகளில் நிலவும் போா்ச் சூழல் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வீட்டு உபயோக எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்வது முடங்கியுள்ள நிலையில், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பல ஹோட்டல்களில் உணவு வகை குறைக்கப்பட்டுள்ளன. சிறிய ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரிய ஹோட்டல்களும்கூட அடுத்த சில தினங்களில் மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என ஹோட்டல் உரிமையாளா்கள் கூறுகிறாா்கள்.

இதுதொடா்பாக திருநெல்வேலியில் ஹோட்டல் உரிமையாளா் அலிஃப் பிலால் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் தனியாா் நிறுவனங்கள் மட்டுமே எரிவாயு உருளை விநியோகம் செய்து வருகின்றன. பெரும்பாலான ஹோட்டல்கள் நவீன சமையல் முறைக்கு வந்துவிட்டதால், திடீரென விறகு அடுப்பிற்கு மாறுவது இயலாதது. சமையலா்களும் விறகு அடுப்பை பயன்படுத்த தயங்கும் நிலை உள்ளது. எனவே, அடுத்த சில தினங்களில் ஹோட்டல்களை மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றாா்.

தனிப்படை அமைப்பு: சமையல் எரிவாயு உருளைகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது மற்றும் பதுக்கப்படுவதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.