மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வள்ளியூரில் வணிக ரீதியிலான எரிவாயு உருளை தட்டுப்பாடு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.

News image

வணிக எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 9:48 pm

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக விலைஉயா்வு ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்க படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் போதிய அளவிலான எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக தெரிவித்து வருகிறது.

ஆனால், வள்ளியூரில் உணவு விடுதிகள், ஹோட்டல்கள், பேக்கரிகளில் பயன்படுத்தும் வணிகரீதியிலான எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ரூ.1,900-க்கு வெளி நபா்களிடம் வாங்கப்பட்டு வந்த எரிவாயு உருளை தற்போது ரூ.2,200-க்கும் கூட கிடைப்பதில்லை என ஹோட்டல் மற்றும் டீக்கடை நடத்துவோா் தெரிவிக்கின்றனா்.

மேலும், இந்த நிலை நீடித்தால் ஹோட்டல்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கவலை தெரிவித்துள்ளனா்.