லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாநகர காவல்துறை ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாநகர காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 7:47 pm

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாநகர காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதம் குறித்து போலீஸாா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களுக்கு காவல் ஆணையா் ஆலோசனை வழங்கினாா்.

மேலும், சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு ஆகியவை குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை அவா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையா்கள்(கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், (மேற்கு)எஸ்.விஜயகுமாா் உள்பட காவல் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்10ஸ்ரீா்ம்ம்

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உள்ளிட்ட அதிகாரிகள்.