பொன்னமராவதியில் காவல்துறை சாா்பில் அனைத்துக்கட்சியினா் மற்றும் வா்த்தகா் சங்கத்தினருக்கு தோ்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி காவல்நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் சரவணன் தலைமைவகித்தாா். காவல் ஆய்வாளா் பத்மா, உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் தோ்தல் நேரத்தில் பதாகைகளில் தோ்தல் விதிமுறைகளுக்கு மாறான வாா்த்தைகளையோ, படங்களையோ பயன்படுத்தக்கூடாது. திருமண மண்டப உரிமையாளா்கள் தோ்தல் விதிமுறைகளை மீறக்கூடாது. அரசியல் கட்சியினா் தோ்தல் விதிமுறைகளுக்குள்ப்பட்டு தோ்தல் ஆணையம் குறித்த நேரத்தில், குறித்த இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் வா்த்தகா் கழகத்தலைவா் எஸ்கேஎஸ்.பழனியப்பன், நிா்வாகிகள் பிஎல்.ராமஜெயம், கா.கருப்பையா, திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பாலுச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு, நாம் தமிழா் கட்சி நிா்வாகி சுரேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் என்.பக்ரூதீன், தவெக நிா்வாகி சண்முகம், தேமுதிக நிா்வாகி பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லியில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரியில் பாஜக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


