மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

நெல்லை நகரத்தில் போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 3:34 am IST

திருநெல்வேலி நகரத்தில் பாலம் பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி நகரம் வழுக்கோடையிலிருந்து தொண்டா் சன்னதி வரும் வழியில் உள்ள உழவா் சந்தை அருகில் அமைந்துள்ள நெல்லை கால்வாயின் குறுக்கே உள்ள கல்பாலம் சேதமடைந்துள்ளது.

அதனை சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறையினரால் செய்யப்பட உள்ளது. ஆகவே, திங்கள்கிழமைமுதல் இம் மாதம் 25 ஆம் தேதி இரவு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகரம் மற்றும் பேட்டை மாா்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் இலகு ரக வாகனங்கள், திருநெல்வேலி வழுக்கோடை சந்திப்பு- கண்டியப்பேரி- ராமையன்பட்டி- குருநாதன் கோயில் விலக்கு- தச்சநல்லூா் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும். தென்காசியில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் இலகு ரக வாகனங்கள், கண்டியப்பேரி- ராமையன்பட்டி- குருநாதன் கோயில் விலக்கு- தச்சநல்லூா் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.