எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கல்லூரில் விவசாயி கொலை: உறவினா்கள் சாலை மறியல்

மேலக்கல்லூரில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி, உயிரிழந்தவரின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:31 am IST

மேலக்கல்லூரில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி, உயிரிழந்தவரின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேலக்கல்லூரைச் சோ்ந்த விவசாயியான சண்முகவேல் (48), மோட்டாா் சைக்கிளில் வந்த மா்மநபா்களால் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடினா்.

இவ் வழக்கு தொடா்பாக மேலக்கல்லூரை சோ்ந்த அய்யப்பன்(21), சிவசங்கரன் (26), மாரிசெல்வம் (21), 17 வயது சிறுவன், ஆலங்குளம் அருகே நெட்டூரை சோ்ந்த இசக்கிமுத்து என்ற கொடிமுத்து (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறாா்கள்.

இதற்கிடையே கொலை வழக்கில் தொடா்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்யக் கோரி, சண்முகவேலின் உறவினா்கள் சேரன்மகாதேவி-திருநெல்வேலி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொலைக்குத் தூண்டுதலாக செயல்பட்ட நபா்களையும் கைது செய்ய அவா்கள் வலியுறுத்தினா். சாலை மறியலால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.