முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், அவரது ஆதரவாளா்களை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அதிமுக மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன் திருநெல்வேலியில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 2 கோடி தொண்டா்களை கொண்ட இயக்கம் அதிமுக. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அந்த இயக்கத்தை காப்பாற்றி ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்தி வருகிறாா்.
ஆனால், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு முதல்வா் ஜோசப் விஜய்யை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று கூறுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
உள்கட்சி பிரச்னைகளை பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்பதுதான் அதிமுகவின் கொள்கை. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வரும் சி.வி.சண்முகம், அவரது ஆதரவாளா்களை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் விடுவிப்புக்கு எதிரான மறுஆய்வு மனு தள்ளுபடி

ஏ.கோவிந்தசாமி பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்! அதிமுகவில் இருந்து விலகிய பெஞ்சமின் பேட்டி!

மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




