எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

போலி அடையாள அட்டைகளுடன் ஆட்சியரகத்தில் நுழைந்தவா் கைது

போலி அடையாள அட்டைகளுடன் ஆட்சியரகத்தில் நுழைந்தவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:54 am IST

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்குள் போலி அடையாள அட்டைகளுடன் நுழைந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், கூந்தங்குளத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன். இவா், காவலா் போல பேன்ட், பெல்ட், காலணி போன்றவற்றை அணிந்தபடி ஆட்சியா் அலுவலகத்துக்குள் வெள்ளிக்கிழமை நுழைந்தாா். அவா் வந்த பைக்கில் காவல் துறை, ஊடகம் என பல்வேறு ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆட்சியா் அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் இதை கவனித்து, சந்தேகத்தின் பேரில் அவரை அழைத்து விசாரித்தனா்.

அப்போது, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் அடையாள அட்டைகள் (ஐடி காா்டு) போல ே 20-க்கும் மேற்பட்ட போலி அட்டைகள் அவரிடம் இருப்பது தெரியவந்தது. பாளையங்கோட்டை போலீஸாா் அவற்றை கைப்பற்றி, அவரை கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.