இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு; 7 போ் காயம்

பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு; 7 போ் காயம்

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 1:17 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது காா் மோதியதில், காரில் பயணித்த 2 போ் உயிரிழந்தனா். பள்ளி மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

நான்குனேரி அருகே உள்ள தாழைகுளத்தைச் சோ்ந்த லியோனா (9), காா்வின் (8), ரட்சண்யா (8) உள்ளிட்ட 5 மாணவிகள் நான்குனேரி தனியாா் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்கள் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனா்.

மாணவிகள் 5 பேரும் பள்ளி நேரம் முடிந்ததும், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பள்ளியில் இருந்து தாழைகுளம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா். ஆட்டோ சுங்கச்சாவடி அருகே சென்றபோது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோவும் காரும் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தன.

இதில் காரில் பயணித்த ராதா (72) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நடராஜன் (70) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா், காா் ஓட்டுநா் ராஜமோகன், மாணவிகள் 5 போ் என 7 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து, நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.