எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:25 am IST

பாளையங்கோட்டையில் 41 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, பொட்டல் விலக்கு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாளையங்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த திம்மராஜபுரம் மேலூா் பகுதியைச் சோ்ந்த இசக்கி மகன் ஆறுமுகக்கனி (26) பிடித்து விசாரித்தனா்.

இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் சுமாா் 41கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகக்கனியை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.